Thursday, August 1, 2013

உன்னை உணர வேண்டுமா ?




உன்னை உணர வேண்டுமா ?
நீ செய்யும் எதையும்
முயற்சியுடன் செய் !

உன் விடாமுயற்சி உன்னை,
வெற்றியின் பாதையில்
அழைத்து செல்லும் !

வெற்றியை விடா முயற்சியே
உன்னை உணர வைக்கும் !!

வெற்றி மற்றவர்களை
உணர வைக்கும்
நீ செய்த விடாமுயற்சியை!!

இது என் முதல் கவிதை !!

வார்த்தைகளை தேடி பார்க்கின்றேன் !!
சிந்தனையில் மொத்தம் நீயே நிற்கிறாய் !!

எழுத முற்பட்டேண் ! தோற்றேன் !!
உன்னிடம் !! என்னை வென்றவள் நீதானே!!

உன்னையே எழுதினேன்!! அப்பவும் நீயே வென்றாய்!!
உன்னிடம் தோற்றது எனக்கும் பெருமை தான்!!

உன்னிடம் தோற்றது என் முதல் வெற்றி!!
என்றும் நீ என்னுள்!

என் அன்பே !!



உன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடு,
அழுகையானாலும் சரி, சிரிக்கவேண்டுமானாலும் சரி,
உன் அழுகையை உன் கண்களின் ஓரத்தில் தேக்கிவைத்து ,
உதட்டில் முழுவதையும் போலியான சிரிப்பாள் மறைத்து விடாதே,
இல்லாயேல் ஒருகணம், தேக்கிவைத்த கண்ணீர் வெள்ளப்பெருக்கால்
உடைந்து விடும், உன் கண்களின் அணை கட்டு !!

உண்மையிலேயே உனக்கு அழவேண்டுமா ?
என்னிடம் அழுதுவிடு இக்கணமே,
அதற்கான காரணம் நானாகவே இருந்தாலும் சரி,
அதை என்னிடமே கூறிவிடு !

பொதுவாகவே மனைவியின் கண்ணீரை காண
ஆசை கொள்ள மாட்டான் அவளுடைய கணவன்,
ஆனால் நானோ, உன்னை அழவைத்து
அதில் சந்தோசம் காணா அல்ல,
உண்மையிலேயே உன்னை நன்கு
புரிந்துக் கொள்ளும் தருவாய்யாக நினைக்கின்றேன் !
என் தவறு இருந்தால் என்னை மன்னித்து வீடு !
அன்பே, நீ என்னுள் சரி பாதி !!

என் தவரை திருத்திக் கொள்ளும்,
எனக்கு கிடைத்த, ஒரு தருவாயாக கருதுக்கின்றேன் !!
அதற்கு உறுதியும் தருக்கின்றேன் !!

உன் முகத்தில் புன்னகையே நான் காண்பேன் என்றும்,
என் வாழ்க்கையின் லெட்சியம், உன்னை சந்தோசமாக
வைத்து கொள்வது தான் !! இதை அனைத்து
தாம்பத்தியரும் நினைப்பார்கள்!!

நீயே அறிந்து கொள்வாய், நான் இதை என் ?
உன்னிடம் கூறுகின்றேன் என்று !!
என்னிடம் எதனையும் பகிர்ந்துக்கொள்,
நான் உன்னிடம் எதனையும் மறைத்தத்திலை,
நான் செய்த தவரையும், என் முதல் காதலையும் கூட,
உன்னிடமே சொல்லிவிட்டேன்,
என்னை நீ நன்கு புரிந்துக்கொள்வதற்கு!!

உண்மையிலேயே நான் உன்னை காதலிக்கின்றேன்,
இன்னும் உன்மேல் காதல் அதிகமாகும் !!
இன்னும் உன்னை காதலித்துக் கொண்டே இருக்க
ஆசையும் கொள்கிறேன்,

உன் காதலை நன்கு புரிந்துக் கொள்வேன்,
என் காதலையும் ஏற்று கொள்வாய்,
என் அருமை மனைவியே !!
நம்முடைய காதல் என்றும்
குறையாமல் நிலைத்து நிற்கும்
என் அன்பே !!

பயன் அற்ற வாழ்க்கை !!

உடைந்த மண் பாணை !
கிழிந்த மென்னையான துணி !
சிதைந்த பெரும் மாளிகை !
திசை மறிய பயணம் !!
இனிப்பு அற்ற இனிப்பு பண்டம் !!
சுவை இல்லாத உணவு !!
சிந்தனை இல்லாத அறிவு !!
பிரிந்து சென்ற உறவுகள் !!
பயன் அற்ற வாழ்க்கை !!

ஸஹானா


நீண்ட நாள் ஆசை,
கனவாய் இருந்தது,
எடுத்த முயற்சி அதை நோக்கி தானோ ?
தெரியவில்லை !!

இருந்தாலும் மனம்
கனவை நோக்கி சென்றது !!
முடிவில் கனவு நிறைவெறியது !!

என் புத்தம் புதிய கிடார்
அதன் செல்ல பெயர் "ஸஹானா"

அது என்னை பார்த்ததும்,
ஒரு சப்தத்துடன் என்கையில் வந்தது,
என்னை உனக்கு பிடித்து விட்டது,
என்பதையும் புரிந்துக் கொண்டேன் !!
நீ என்னிடம் இருக்க வேண்டும்
உன்னை எனக்கும் பிடித்து விட்டது !!

உன்னை விரைவில் நன்கு,
புரிந்துக் கொள்வேன்! படித்தும் கொள்வேன்!!
நீ எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் !!

உன் சிரிப்பு!!


உன்னை பார்த்தேன் சிரித்தாய்!!
சிரித்தாய் என்னை கவிழ்த்தாய்!!
சிந்தித்தேன் உன்னை மறக்க,
உன்னை மறுமுறை பார்த்தேன்,
அந்த சிந்தனையே மறந்தது!!

காலத்தின் கட்டளை !!




சொல்லி சொல்லி பார்த்தேனே !
உன்னிடம் சொல்லாமல் மறைத்தேனே!

நான் சொல்லாமல் மறைத்ததையே
எடுத்து கட்சைக் கட்டினாயே!

நான் விட்டுக் கொடுத்தும் போகவில்லை
உன்னை மதித்தும் பேசவில்லை!

நாம் இருவரும் வெறுக்கவில்லை !
உன்னை போல யாரும் இல்லை !!

நீ இன்றி நான் இல்லை !!
நான் இன்றி நீயும் இல்லை!!

நாம் இருவரும் சேரவில்லை !!
இது என்ன காலத்தின் கட்டளையோ !!

கடினம் !!

"சிகரத்தில் நிற்பது சிகரத்தை
அடைவதை விட மிக கடினமானது"

யோசிக்கலாம் !!



மக்கள் பலர் கைரேகை பார்க்கின்றனர்!
கைரேகையில் தான் வாழ்க்கை உள்ளது என்றால் ?

கையே இல்லாத மனிதனுக்கு வாழ்க்கை இல்லையா ?
இதை பலரும் சொல்லி இருக்கிறார்கள்!

முயற்சியும் தன்னம்பிக்கையும் தான்
மனிதனின் வாழ்க்கையின் பாதையில் நடத்தி செல்லும் !!
ஏன் மக்கள் இதை முழுமையாக எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர் ?

அழுகையும் சிரிப்பும்



நள்ளிரவில் ஆழ்ந்த நித்திரையில்,
தேவதையின் வருகையின் எதிர்பார்ப்பின் போது,
ஒரு குட்டி தேவதையின் அழுகையில்,
நான் விழித்துக் கொண்டேன் !!

ஊரே அமைதியான நிலையில்,
தன் தாயிடம் பசியை வெளிப்படுத்தியது,
மிகுந்த சப்தத்துடன் அந்த அழுகை!!

பசியை தாய் நீக்கியதும்,
மழலையின் சிரிப்பு சத்தம் மட்டும்,
"குவா! குவா!" என்றது,

என் நித்திரையில் தோன்றியது,
அழுகையும் சிரிப்பும் மட்டுமே போதும்,
பின்சு குழந்தையும், தாயும் உரையாட வென்று!!

வண்ணத்து பூச்சி



ஏய் வண்ணத்து பூச்சியே,
உன்னை வரைந்த ஓவியன் தான் எங்கே ?

மனதைக் கொள்ளைக் கொள்கிறாயே !
சிறகுகளை அசைத்து அசைத்து,

நீ பறக்கும் பொழுது,
என்னையும் உன்னிடமே இழுத்துச் செல்கிறாயே !

மனதைக் கவர்வதற்கு நீ காரணமா இல்லை,
உன்னை வரைந்த ஓவியன ?
புகழும் யாருக்கு ?

மாற்றத்தில் ஒரு வேறு பாடு !



அனைத்தும் மாறும், மாற்றத்தை தவிர,
காலம் ஒரு அஸ்திவாரம் !
இதிலும் ஒரு வேறு பாடு !

தந்தை தாய், இன்று பிறந்த குழந்தைக்கு,
அதே உறவு, குழந்தை வளர்த்த பின்பும்,

மாறாததும் உண்டு உலகில்,
புனிதமான முத்தான உறவுகளும் !


நிறம்




செம்மண்ணே! ரோஜா செடியை
உன் மேல் நற்று,
வளர்த்த தன் பயனோ
சிவந்த ரோஜாவாக மலர்ந்தாயோ ?


வெண்ணிற ரோஜாவாய் மலர்ந்து
உன் உள்ளத்தின் தூய்மையை காட்டினாயோ ?

மாய்யை

கண் முன்னே நடக்கும் அனைத்தும் உண்மை இல்லை !!
கணவில் தோன்றும் அனைத்துமே பொய்யும் இல்லை !!
எல்லாமே ஒரு மாய்யை !!

அதிகம்

ஒன்று இரண்டு,
மூன்று நான்கு,
ஏன் எண்கள் மட்டுமே அதிகமாக வேண்டுமா ?

மனிதனின் தன்னம்பிக்கையும்,
விட முயற்சியும், கடின உழைப்பும்,
வெற்றி கனிகளின் சுவைகள் அதிகமாக்கி கொள்ள முடியாதா ?

சூரியா





மலைகள் ஆக நண்பர்களும் சூழ்ந்து இருக்க,

சோலையாக உறவினர்களும் பசுமை போல காட்சி அளிக்க,

நதிகளாக புது நாட்களும் ஓட,

இனிய கானங்களுடன் பறவைகளும் பார்க்க,

தன்னந்து தனியாக தனித்து நிற்கிறேனே நான்!!

சிரித்த முகத்துடன் !! என்னை பார்க்கிறாயே சூரியகாந்தி !!

என்னை போலவே நீயும் இருக்கிறாயே ?

நானோ என்னை எரித்துக் கொண்டு சிரிக்கிறேன் !!

நீயோ என்னை காண உன் மென்மையான சிரிப்பாள் கவர்கிறாயே ?

உன் சிரிப்பாள் நான் எரிகிறதையே மறக்கின்றேன் !!

பூமி என்னை மறைத்தாலும் திரும்பிக் கொண்டாலும்,

உன்னை காண தினமும் வருவேன் தவறாமல்!!

அதனால் தானோ நாம் பிரியாமல் இருக்க,

உன் பெயரிலேயே சேர்ந்துக்கொண்டு இருக்கிறேன் ?